ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி கலீல் அகமது, அபிஷேக் வர்மா ஆகியோரது சிறப்பான பந்து வீச்சால் 19.4 ஓவர்களில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 22, ஷாருக்கான் 22 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் கே.எல்.ராகுல் 4, கிறிஸ் கெயில் 15, நிக்கோலஸ் பூரன் 0, தீபக் ஹூடா 13, மோய்சஸ் ஹெண்ட்ரிக்ஸ் 14, பேபியன் ஆலன் 6, முருகன் அஸ்வின் 9, மொகமது ஷமி 3 ரன்களில் நடையை கட்டினர்.