Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் மு.க.ஸ்டாலின்!

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

திமுக தலைவரும் தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை கடந்த மார்ச் 9-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 22) காலை 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை காவேரி மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் செலுத்திக் கொண்டார். 

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-  இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!'' இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்