Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தடுப்பூசி மையங்களில் நாளை வரிசையில் நிற்காதீர்; தடுப்பூசி கையிருப்பில் இல்லை: கெஜ்ரிவால்

தடுப்பூசி மையங்களில் நாளை வரிசையில் நிற்க வேண்டாம், தடுப்பூசி கையிருப்பில் இல்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கவுள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "யாரும் நாளை தடுப்பூசி மையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை" என்று கூறினார்.

மேலும் "தடுப்பூசி வந்தவுடன், நாங்கள் முறையான அறிவிப்புகளை வெளியிடுவோம். அதன்பிறகு தடுப்பூசிக்காக பதிவு செய்த நபர்கள், தடுப்பூசி மையங்களுக்கு வரலாம்" என்று அவர் கூறினார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்