Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா எதிரொலி: டெல்லியில் அரசு, தனியார் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு https://ift.tt/2PNDKxj

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டிய நிலையில் டெல்லியில் நேற்று 7,427 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 24 பேர் பலியாகினர் . அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்