Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நேரத்தில் ஏற்றுமதி செய்வது சரியா? - ராகுல் காந்தி https://ift.tt/3fXi0cP

கொரோனா வேகமாக பரவிவரும் இந்நேரத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்னை என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து 3 நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான் இருப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தடுப்பூசிக்கு எந்தவிதமான பற்றாக்குறையும் இல்லை என மத்திய அரசு கூறி வருகிறது.

image

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “கொரோனா காலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுவது என்பது தீவிரமான பிரச்னை. இதை கொண்டாட்டமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மாநிலங்களுக்கு இடையே எந்தவிதமான பேதமும் பார்க்காமல், வேறுபாடு காட்டாமல், கொரோனா தடுப்பூசியை போதுமான அளவில் வழங்கி மத்திய அரசு உதவ வேண்டும்.

நான் கேட்கிறேன், கொரோனா பரவலால் நம் நாட்டு மக்கள் உயிர் பயத்தால் அச்சத்துடன் இருக்கும்போது, தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வது என்பது சரியான நடைமுறையா? நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி அதைத் தோற்கடிக்க வேண்டும். தேவைப்படும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தற்போதைய தடுப்பூசி செலுத்தும் நடைமுறை நத்தை வேகத்தில் நகர்கிறது. இது தொடர்ந்தால் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த பல ஆண்டுகள் ஆகும். இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். 

தடுப்பூசிகளை பெரிய அளவில் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஏன் அனுமதிக்கிறது என்பதற்கு தெளிவான காரணம் எதுவும் இல்லை. நம் நாடு தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆறு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாநில அரசுகள் மீண்டும் மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்