மயிலாடுதுறை தொகுதி செருதியூரில் வாக்குப்பதிவுக்கு பின்னர் சீலிடப்பட்ட விவிபேட் இயந்திரத்தை, முகவர்கள் இல்லாமல் தேர்தல் அலுவலர்கள் திறந்ததால் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
மயிலாடுதுறை தொகுதி செருதியூரில் உள்ள 263-வது வாக்குச்சவாடியில், வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. பின்னர் இரவு 10.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டது. அப்போது, விவிபேட் இயந்திரத்தில் பேட்டரி அகற்றப்படாததை அறிந்த அதிகாரிகள், கட்சிகளின் முகவர்கள் இன்றி சம்பந்தப்பட்ட விவிபேட் இயந்திரத்தின் சீலை அகற்றியுள்ளார். இதனை தூரத்திலிருந்து பார்த்த பல்வேறு கட்சிகளின் முகவர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர்.
முகவர்கள் இல்லாமல் விவிபேட் இயந்திரத்தை திறந்து முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், எனவே மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் பல்வேறு கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர். அலுவலர்களின் அறியாமையால் ஏற்பட்ட தவறு என்றும், பதிவான வாக்குகளில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி விளக்கம் அளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்