Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராஜஸ்தான்: 18 மாத குழந்தைக்கு கருப்பு பூச்சை பாதிப்பு

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் 18 மாத குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில், இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்கும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்படி பல்வேறு மாநிலங்கள் இந்த நோயை தொற்றுநோயாக அறிவித்து நடவடிக்கை எடுத்துவருகின்றன. குஜராத் மாநிலத்தில் அதிக அளவாக 2859 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து மகாராஷ்டிராவில் 1770 பேருக்கும், ஆந்திராவில் 768 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 மாத குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு இணை நோய்கள் எதுவும் இல்லாத நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்