Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செங்கல் சூளையில் வேலை செய்யும் கால்பந்து வீராங்கனை: ரூ.1 லட்சம் நிதி, பயிற்சியாளர் வேலை வழங்குவதாக ஜார்க்கண்ட் அரசு உறுதி

ஜார்க்கண்டை சேர்ந்த சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர், அங்குள்ள செங்கல் சூளையில் கூலிக்கு வேலை பார்க்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா குமாரி (20). தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பல முறை கலந்து கொண்டிருக்கும் அவர், இரண்டு முறை சர்வதேச போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி சார்பில் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். எனினும், ஏழ்மை நிலை காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மாநில அரசிடம் பல முறை உதவி கோரியும் அது பலனளிக்கவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்