புதுச்சேரியில் வரும் மே 24 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 10 ஆம் தேதி வரை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்