Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு சற்று குறைவு; புதிதாக 2,59,591 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் குணம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் 4,209 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 60 லட்சத்து 31 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளது. தொற்றில் இருந்து 2 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்து 735 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்பால் இதுவரை 2 லட்சத்து 91 ஆயிரத்து 331 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 30 லட்சத்து 27 ஆயிரத்து 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரையில் நாடு முழுவதும் 19 கோடியே 18 லட்சத்து 79 ஆயிரத்து 503 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்