Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகாராஷ்டிரா: கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு புதிய நோய் - 52 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்றிற்கு இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கும், குணமடைந்து வருவபர்களுக்கும் ‘மியூகோர்மைகோசிஸ்’ என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை தொற்று நோய் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதன் அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, நாசியில் பிரச்னை உள்ளிட்டவை முன்வைக்கப்படுகின்றன.

imageகா

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் 52 பேர் கருப்பு பூஞ்சை தொற்றிற்கு பலியாகியுள்ளதாகத் தெரிவித்தார். அவர் கூறும் போது, “ மாநிலத்தில் 1500 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று நோய் இருந்த நிலையில், அது இந்த இராண்டாவது அலையில் வேகமாக பரவுகிறது.

image

இதனை வேறுவகையிலான சிகிச்சை முறை கொண்டு அணுகவேண்டியுள்ளது. இது அரசிற்கு கூடுதல் பளுவாக அமைந்திருக்கிறது. கொரோனா முதல் அலையின் போது இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் வெகு சிலரே உயிரிழந்திருந்தனர். ஆனால் இராண்டாவது அலையில் அதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மூக்கு, கண்கள் வழியாக பரவும் இந்த தொற்று நோய் நேரடியாக மூளையை பாதிக்கிறது.” என்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவேகருப்பு பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 8 நோயாளிகள் தங்களது ஒரு கண் பார்வையை இழந்துள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு லட்சம் ஆம்போடெரிசின்-பி மருந்தை வாங்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது என்று ராஜேஷ் டோப் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்