Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பயோ-பபுளுக்குள்ளும் புகுந்த கரோனா; வருண், வாரியருக்குத் தொற்று: இன்று நடக்க இருந்த கொல்கத்தா-ஆர்சிபி போட்டி ஒத்திவைப்பு

பயோ-பபுளை உருவாக்கி அதற்குள் வீரர்களைப் பாதுகாப்பாக வைத்து ஐபிஎல் டி20 தொடர் நடத்தப்பட்ட நிலையில் அதற்குள்ளும் கரோனா வைரஸ் புகுந்து தனது வேலையைக் காட்டி, போட்டியை நிறுத்திவிட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, இன்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்