Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் வர்ணனை தொடங்கிய நாள்

சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளைக்கூட இன்றைக்கு நாம் நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்து வருகிறோம். இதற்கெல்லாம் அடித்தளமிட்ட நாள் மே 14.

1927-ம் ஆண்டு மே 14-ம் தேதிதான் முதல்முறையாக கிரிக்கெட் போட்டி ஒன்றின் நேரடி வர்ணனை பிபிசி வானொலியில் ஒலிபரப்பானது. 1927-ம் ஆண்டில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப் பயணத்தின்போது, நியூசிலாந்து அணிக்கும், இங்கிலாந்தின் கவுண்டி அணியான எஸெக்ஸ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி லெய்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியை கில்லிங்காம் என்பவர் பிபிசி தொலைக்காட்சியில் நேரலையாக சிறிது நேரம் வர்ணனை செய்தார். கில்லிங்காம் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதோடு, அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதாலும், உள்ளூர் மதப்பிரச்சார கூட்டங்களில் சிறப்பாக பேசி வந்ததாலும், கிரிக்கெட் போட்டியை முதல் முறையாக நேரடியாக வர்ணனை செய்யும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்