Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. இதனால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல்  ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி காய்கறி, மளிகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் ஒருவார காலத்துக்கு திறக்கப்படாது. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பார்சல் உணவு சேவை தவிர்த்த எந்த சேவையும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் நிலையில், நேற்று அனைத்து கடைகளும் திறந்திருந்தது. இதனால் தமிழகம் முழுவதுமே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்