Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தில் இணைய தனி விமானம் மூலம் அஸ்வின், மயங்க் அகர்வால், பரத் அருண் மும்பை சென்றனர்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு பயணமாவதற்கான ஒரு கட்டமாக உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தில் இணைவதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றனர்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணியைச் சேர்ந்த20 வீரர்கள், மாற்று வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 14 நாட்கள் கொண்ட உயிர் பாதுகாப்பு குமிழி வளையத்தை மும்பையில் உருவாக்கி உள்ளது. இந்த தனிமைப்படுத்துதல் காலமானது இன்று தொடங்குகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்