Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னையில் மற்றொரு பள்ளியில் ஆசிரியரால் பாலியல் தொந்தரவு?

சென்னையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு பள்ளியில் பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

சேத்துப்பட்டு பகுதியில் மகரிஷி வித்யா மந்திர் தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆனந்த்-க்கு எதிராக முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் பலரும் சேர்ந்து, குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் ஆசிரியர் ஆனந்த் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் தொடர்பாக நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரணை நடக்கும் வகையில் குழு அமைக்கப்படும் எனவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்