Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு செய்கிறார்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் நேற்று 3,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கோவையில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காணொலி வாயிலாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். மேலும் கோவை மாவட்டத்தில் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைப்புப் பணிகளை கண்காணிக்க சந்த்திக் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவையில் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிகிறார். இதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், திருப்பூரிலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இதன்பின்னர் மாலையில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்