Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்”- பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி 74 இடங்களில் மட்டும் வென்று தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலிக்கு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த ஸ்டாலின் “எடப்பாடி பழனிசாமிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்” என பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்