Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் 40,000-க்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு: இன்று 37,566 பேருக்கு கொரோனா  

இந்தியாவில் ஒரேநாளில் 37,566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 102 நாட்களுக்கு பின்னர் 40 ஆயிரத்துக்கும் கீழ் கொரொனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரொனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 566  ஆக உள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 16 ஆயிரத்து 897 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒரேநாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 907 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 56 ஆயிரத்து 994 பேர் குணமடைந்தனர், இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 93 இலட்சத்து 66 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 5 லட்சத்து 52 ஆயிரத்து 659 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் சதவீதம் 96.87% ஆக அதிகரித்திருக்கிறது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்