Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பைக் முதல் வாஷிங்மிஷின் வரை பரிசு... தடுப்பூசி போடவைக்க இளைஞர்களின் புது முயற்சி

அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவோருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்படுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சற்று மாற்றியோசித்த ஒரு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் அதே பிரியாணியை எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பிரியாணி, குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள், சலவை இயந்திரம், தங்க நாணயம், மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும் என தடுப்பூசி பற்றிய எதிர்மறை கருத்துக்களை விரட்ட தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் விடுத்திருக்கும் அறிவிப்பு இது.

சென்னையை அடுத்துள்ள கோவளம் பகுதியில் கோவிட் இல்லாத கோவளம் என்பதை இலக்காக கொண்டு இவ்விளைஞர்கள் மேற்கொண்டுள்ள நூதன முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. பிரியாணி மற்றும் பரிசுப் பொருட்கள் பற்றிய அறிவிப்பால் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக கூறும் கோவளம் பகுதி மக்கள் தற்போது அதற்கு ஆதரவாக பேசத் தொடங்கிவிட்டனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்