Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘கட்சியை வீணாக்க விட முடியாது; நான் கட்டாயம் வருவேன்’ - சசிகலா

‘தொண்டர்கள் விருப்பப்படி நான் கட்டாயம் வருவேன்’ என சசிகலா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கிறேன் எனக் கூறி இருந்தார் சசிகலா. தேர்தல் முடிவடைந்து ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், தற்போது அதிமுக, அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. இதையடுத்து சசிகலாவுடன் பேசுபவர்களை கட்சியில் நீக்கம் செய்து அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ,சசிகலா தொண்டருடன் பேசிய மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், “தொண்டர்கள் விருப்பப்படி நான் கட்டாயம் வருவேன். கட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும். கட்டாயம் வந்துவிடுவேன். ஏனெனில் கட்சியை வீணாக்க விட முடியாது. சாதி, மத பாகுபாடு நான் பார்க்க மாட்டேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியைத்தான் கடைபிடிக்கிறேன்” என சசிகலா பேசுகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்