Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகளிர் குத்துச் சண்டையில் அரை இறுதிக்கு தகுதி; ஒலிம்பிக்கில் 2-வது பதக்கத்தை உறுதி செய்தார் லோவ்லினா: பாட்மிண்டனில் சிந்து அரை இறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் திருவிழாவின் 8-வது நாளான நேற்று குத்துச் சண்டையில் மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் 4-1 என்ற கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான சீன தைபேவின் நியென்-சின் செனை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். லோவ்லினா அரை இறுதிக்கு முன்னேறியதால் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் பெறுவது உறுதியாகி உள்ளது.

அடுத்த சுற்றில் 4-ம் தேதி உலக சாம்பியனான துருக்கியின் புசெனாஸ் சுர்மெனெலியை லோவ்லினா எதிர்கொள்கிறார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்