Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டோக்கியோ ஒலிம்பிக்: இதுவரை 3 வீரர்களுக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 3 விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் கிராமத்துடன் தொடர்புடைய 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 23-ஆம் தேதி தொடங்குகின்றன. பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், டோக்கியோ சென்றுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 2 தென்னாப்ரிக்க கால்பந்து வீரர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், செக்குடியரசின் வாலிபால் வீரர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

image

இதுதவிர, அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் மாற்று வீராங்கனை ஒருவருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவைதவிர ஒலிம்பிக் கிராமத்துடன் தொடர்புடைய 54 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளான அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் கிராமத்தில் நாளுக்குநாள் தொற்று அதிகரிக்கும் நிலையில், தடுப்புப் பணிகளும் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்