Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது" : நீதிபதிகள்

நீர்நிலை ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. நீர்நிலைகளையும், இயற்கையும் பாதுகாக்கும் காவலர்களாக மாநிலங்கள் இருக்க வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், " சிவகாசி பகுதியில் வேலாயுதம் ஊரணி அமைந்துள்ளது. இந்த ஊரணியில் நுண்ணிய உர மையம் (micro compost centre) அமைப்பதற்காக சிவகாசி நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வேலாயுதம் ஊரணி முற்றிலுமாக அழியக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டிடங்கள் கட்ட கூடாது என சட்டம் உள்ளது. 2019 ஆண்டு வேலாயுதம் ஊரணியில் நுண்ணிய உர மையம் அமைக்க கூடாது என விரிவான மனு தயார் செய்து சமர்ப்பித்து உள்ளேன். மேலும் இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு 8 வாரங்களுக்குள் சிவகாசி நகராட்சி ஆணையர் எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால் எனது மனு மீது உரிய முறையில் விசாரணை நடத்தாமல் மீண்டும் வேலாயுத உளரணியில் நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவே வேலாயுதம் ஊரணியில் நுண்ணிய உர மையம் செயல்பட தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது, பழங்கால நீர்நிலைகளை பாதுகாப்பது மாநிலத்தின் கடமை, நீர் நிலைகளுக்கும், இயற்கைக்கும் அறங்காவலராக மாநிலங்கள் இருக்க வேண்டும் என கருத்துக் கூறி சம்பந்தப்பட்ட இடத்தினை புறம்போக்கு இடமாக மாற்றப்பட்டு அங்கு நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துவிட்டது, எனவே, மழைக்காலங்களில் நுண்ணிய உரம் மையத்தினால் நீர்நிலைக ஒக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை சிவகாசி நகராட்சி உறுதி செய்ய வேண்டும் மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்