Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நாடாளுமன்ற வளாகத்தில் டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் அருகே டிராக்டர் ஓட்டி வந்து போராட்டம் நடத்தினார்.

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றம் அருகே உள்ள ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே டிராக்டர் ஓட்டி வந்து விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என ராகுல் அப்போது வலியுறுத்தினார். ராகுல் காந்தியுடன் டிராக்டரில் பயணித்தவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்