டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா குறைந்தது 5 தங்கம் உட்பட 15 பதக்கங்கள் வெல்லும் என இந்தியா செஃப் டி மிஷன் குர்ஷரன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 24ம் தேதி பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து 54 பாரா தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், படகு போட்டி, துப்பாக்கிச்சுடுதல், நீச்சல், பளுதூக்குதல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ உள்ளிட்ட 9 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
0 கருத்துகள்