Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியா: புதிதாக 41,831 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்று தணிந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது.
 
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,831 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,16,55,824 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் ஒரே நாளில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,351 ஆக உயர்ந்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,258 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,08,20,521 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் 4,10,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்