Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மூணாறு நிலச்சரிவு ஓராண்டு நினைவு தினம்: உயிரிழந்தவர்களின் கல்லறைகளில் மலரஞ்சலி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கி 70 பேர் மண்ணுக்குள் புதைந்த கோர சம்பவத்தின் ஒராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் கல்லறைகளில் உறவினர்கள்,பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மலர் வைளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே பெட்டிமுடி என்ற மலை கிராமத்தில் ஏராளமான தோட்டத்தொழிலாளர்கள் வசித்து வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை, கன மழையாக பெய்ததால் அப்பகுதியில் இருந்த மிகப்பெரிய மலைக்குன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைக்குன்று ஒன்று சரிந்து விழுந்ததில் தோட்டத் தொழிலாளர்கள் இருந்த தொடர் குடியிருப்புகள் மண்ணிற்குள் புதைந்தன.
 
image
இதில் குடியிருப்பில் வசித்து வந்த 70 பேர் மண்ணில் புதைந்து பரிதாமாக உயிரிழந்தனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்ணிற்கடியில் புதைந்து போனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த கோர நிகழ்வு நடந்து, ஓராண்டு கடந்த தினத்தை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் மலர்கள் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளும் இறந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
 
நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கெனவே கேரள முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. அதோடு வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டு கொடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் உயிரிழந்த 65 தமிழர் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பிலும் தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
 
- ரமேஷ் கண்ணன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்