Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக தலைமைப் பொறுப்பை ஏற்கும் இந்தியா

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கிறது.
 
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடு, மாதம் ஒருமுறை கவுன்சிலுக்கு தலைமைப் பொறுப்பேற்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரல்லாத நாடாக 2 ஆண்டுகளுக்கு இந்தியா இடம்பெற்றிருப்பதற்கான காலம் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடங்கியது.
 
இந்நிலையில் முதல்முறையாக ஆகஸ்ட் 2-ஆம்தேதி முதல், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைமைப்பொறுப்பை வகிக்கும் இந்தியா, கடல்பகுதி பாதுகாப்பு, அமைதி, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய முக்கிய அம்சங்களை முன்னெடுத்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்த சிறப்பும், பொறுப்பும், இந்தியா வசம் வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ஐநாவுக்கான இந்திய தூதர் டிஎஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்