Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிக்கின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஒட்டுக்கேட்பு விவகாரத்தைக் கண்டித்து ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் செல்கின்றனர். எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து ராகுல்காந்தி உள்ளிட்டோர் சைக்கிளில் செல்கின்றனர்.

அதேசமயத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு கூட்டமானது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும், தினமும் முழக்கங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டம் நடக்கவிடாமல் தடுப்பதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்த பாஜக எம்.பிக்களின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்