வரும் அக்டோபர் மாதத்தில் முஷ்டாக் அலி டி20 தொடரையும், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், வீரர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் செல்லும்போது தொற்று ஏற்பட வாய்ப்பு இருந்ததாலும் கடந்த ஆண்டு ரஞ்சிக் கோப்பைப் போட்டித்தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சீசனில் நடத்த பிசிசிஐ அமைப்பு முடிவு செய்து அட்டவணையை வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்