Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

போதைப் பொருள் வழக்கு: நடிகை ரகுல் ப்ரீத் சிங் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்

போதைப் பொருள் வழக்கு விசாரணைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று நேரில் ஆஜரானார்.

தமிழில் "தடையற தாக்க", "தீரம் அதிகாரம் ஒன்று", "என்ஜி.கே"., "ஸ்பைடர்" ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார். போதை மருந்து விவகாரத்தில் பல தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகளுக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே, இயக்குனர் பூரி ஜெகன்நாத், சார்மி , ரகுல் ப்ரீத் சிங், ராணா, நவ்தீப், ரவிதேஜா உள்பட 12 பிரபலங்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

image

இப்போது இந்த வழக்கில் பண மோசடியும் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஏற்கெனவே பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத், சார்மி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்