Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'வருமுன் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.

தனி விமானம் மூலம் சேலம் சென்ற அவர், வாழப்பாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஏழை, எளிய மக்களை நோய் பாதிப்பிலிருந்து முன்கூட்டியே பாதுகாக்கும் நோக்கத்தில், இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் 385 வட்டாரங்கள் மற்றும் 21 மாநகராட்சிகளில் ஆயிரத்து 250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Image

ஒவ்வொரு முகாமிலும் ஒரு பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுக்கள் மூலம் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 2006ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் என்ற பெயரில் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்