Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் - பாட்மிண்டன் முதல் சுற்றில் பிரமோத் பகத் வெற்றி

ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் நடைபெற்று வருகிறது. இதன் 9வது நாளான நேற்று பாட்மிண்டனில் கலப்பு அணிகள் எஸ்எல் 3- எஸ்யு 5 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், பாலக் கோலி ஜோடி தங்களது முதல் சுற்றில் பிரான்ஸின் லூகாஸ்மசூர் மற்றும் ஃபாஸ்டின் நோயல்ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி 9-21, 21-15, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.

10 மீட்டர் ஏர் ரைபிள் புரோன்எஸ்ஹெச் 1 கலப்பு பிரிவில் இந்தியாவின் சித்தார்த்தா பாபு, தீபக், அவனி லேகாரா ஜோடி இறுதி சுற்றுக்கு தகுதி பெறத் தவறியது. நீச்சலில் ஆடவருக்கான 100 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டிரோக் எஸ்பி 7 பிரிவில் இந்தியாவின் சுயாஷ்ஜாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்