Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ப்ளே ஆஃப் சுற்றுக்கு 2-வது முறையாக தகுதி பெற்ற ஆர்சிபி: காப்பாற்றிய மேக்ஸ்வெல் , சஹல்

2020ம் ஆண்டைத் தொடர்ந்து இந்த ஐபிஎல் டி20 சீசனிலும் ப்ளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதிபெற்றது. ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது, வீரர்களுக்கு ஊக்கத்தை அளித்து, அச்சமின்றி விளையாடத் துணைபுரியும் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஷார்ஜாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. 165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்