Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, அகவிலைப்படி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டு, ஏற்கனவே 28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வை ஜூலை ஒன்றாம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க புதுச்சேரி அரசு முடுவு செய்துள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்றும் மாதத்திற்கு 3.2 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் எனவும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

இதனைப்படிக்க...மாணவர்களின் "மைம்" நிகழ்ச்சிமூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேப்பேரி போலீசார் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்