நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் புதிய தலைமுறையிடம் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம்தான் என்று கூறிய லதா ரஜினிகாந்த், முழு உடல் பரிசோதனைக்காக ஒருநாள் மட்டும் ரஜினிகாந்த் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவித்தார்.
தலைவர் நலமாக இருக்கின்றார் , வதந்திகளை நம்பவேண்டம்
— Sudhakar (@SudhakarVM) October 28, 2021
இதனிடையே ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “தலைவர் நலமாக இருக்கின்றார், வதந்திகளை நம்பவேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 7: 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' - மரமும் மரம் சார்ந்த மகத்தான செயலி!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்