Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் இனி புதிய பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை - அமைச்சர் மெய்யநாதன்

தமிழ்நாட்டில் இனி புதிய பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதியில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் எனக்கூறினார். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், 3 ஆயிரம் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். பிளாஸ்டிக் பயன்படுத்தும் விவகாரத்தின் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்