முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவுக்கு எந்த அபாயமும் இல்லை என்றும், பீதியை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தொடர் மழை காரணமாக கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 136 அடியை தாண்டியுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையிலிருந்து, வைகை அணைக்கு நீர் திறக்க வேண்டும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் பேசிய பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு குறித்து தற்போது சமூகவலைத்தலத்தில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் மிகவும் தவறானவை என்றும், பீதி ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: உ.பி.யில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்