Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

“அம்மா தூங்குகிறார்” - இறந்த தாயின் உடலுடன் பல நாட்கள் இருந்த இரண்டு பிரான்ஸ் குழந்தைகள்

வடமேற்கு பிரான்சில் திடீரென இறந்த தங்கள் தாயின் உடலுடன் ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகள், ஒரே வீட்டில் பல நாட்கள் ருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நாட்களாக இந்த இரு குழந்தைகளும் பள்ளிக்கு வராததால், பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் லே மான்ஸ் நகர போலீஸார் அவர்களின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த இரண்டு குழந்தைகளும் போலீசாரிடம், "அமைதியாக இருங்கள், அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினர்.

அதன்பின்னர் வீட்டை ஆய்வு செய்த போலீசார் இறந்த அக்குழந்தைகளின் தாயின் உடலை கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் படி அவர் இயற்கையான காரணங்களால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த இரு சிறுமிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அரசின் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இதனைப்படிக்க...'பட்டாம்பூச்சிகளால் சூழப்பட்ட கொரில்லா' :  உலகின் மிகச்சிறந்த புகைப்படமாக தேர்வு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்