Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மதுபோதையில் நடந்து சென்ற நபர் லாரிக்குள் தவறி விழுந்து தலைநசுங்கி உயிரிழப்பு

சாலையில் மதுபோதையில் நடந்து சென்ற நபர், எதிரே வந்த லாரியின் உள்பக்கமாக தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (33). நேற்று இரவு இவர் கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு  வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவில் மதுபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரியில் உள்பக்கமாக முருகன் தவறி விழுந்தார். இதில் லாரியின் சக்கரம் தலை மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே முருகன் உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இறந்த முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மதுரை: நெகிழி டப்பாவில் தலை சிக்கி உயிருக்கு போராடிய தெருநாயை காப்பாற்றிய இளைஞர்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்