தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,009-ல் இருந்து 990 ஆக குறைந்துள்ளது என மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
1,20,153 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் பாதிப்பு 990 ஆக உள்ளது. சென்னையில் ஏற்கெனவே 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 20 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,136 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவமனைகளில் 17 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவத்துறை தெரிவித்தள்ளது.
கோவையில் 119 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 117 ஆக குறைந்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டில் 83 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 85 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஈரோடு-73, திருப்பூர்-66, சேலம்-57, நாமக்கல் மற்றும் தஞ்சை-42, திருச்சி-35, திருவள்ளூரில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்