Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தபால் நிலையங்களில் தங்கப் பத்திரம் விற்பனை தொடக்கம்

மத்திய அரசு தங்கப் பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது.

தங்கப் பத்திர விற்பனை தபால் நிலையங்களில் இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 03-ஆம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 4791 ரூபாய் ஆகும்.

image

தமிழகத்தில் சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராய நகர் தலைமை தபால் நிலையம் மற்றும் மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்கப் பத்திர விற்பனை நடைபெறுகிறது. 

ஒருவர் ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் 4 கிலோ கிராம் வரை தங்கம் வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை முதலீட்டாளர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 5 ஆண்டுகள் முடிந்தவுடன் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில்  அன்று உள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான தொகை கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் கார்ட் கட்டாயம்.

image

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஒன்றின் நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்கப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மு.ஸ்ரீராமன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாம் : ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யுமா? - மருத்துவ நிபுணர்கள் சொல்வதென்ன? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்