Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ட்விட்டர் நிறுவன புதிய சிஇஓ பரக் அகர்வால் பெறும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் இந்தியரான பரக் அகர்வால். இந்நிலையில் இந்த பணிக்காக அவர் எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பதை தான் இணையதளத்தில் பலரும் தேடி உள்ளதாக தெரிகிறது.

image

அவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது குறித்து ட்விட்டர் நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ள பணி ஆணையில் ஆண்டுக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஊதியம் என குறிப்பிட்டுள்ளது. அதோடு அவருக்கு ஊக்கத் தொகையாக அவரது ஆண்டு வருமானத்தில் 150 சதவிகிதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராண்ட் டேட் ஃபேஸ் வேல்யூவின் கீழ் 12.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் பத்து ஆண்டுகளாக ட்விட்டரில் பணியாற்றி வருகிறார் பரக் அகர்வால் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தவிர மற்ற சலுகைகளும் அவருக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம் : டிஜிட்டல் உலகை ஆளும் இந்தியர்கள்! சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா வழியில் பரக் அகர்வால்! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்