Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1லிருந்து 34 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன; அதில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இன்னும் 24 பேருக்கான ஒமைக்ரான் முடிவு வரவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

image

மேலும் லேசான தலைசுற்றல் போன்ற சிறுசிறு பாதிப்புகளுடன் 34 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஒமைக்ரான் உறுதியான 34 பேரில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்; ஒருவர் கேரளாவிலிருந்து வந்தவர். சென்னையில் 26 பேர், மதுரையில் 4, திருவண்ணாமலையில் 2, சேலத்தில் ஒருவருக்கு  ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64, தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. விமான நிலையங்களை கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்