அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ராஜேஷ் எனும் தொண்டர் தாக்கப்பட்டது வேதனையளிப்பதாக கூறியுள்ளார். தொண்டர்களின் நலனின் அக்கறை செலுத்தும்போதுதான், அதிமுகவின் மீது நல்ல எண்ணம் உருவாகும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஒரு இயக்கத்துக்கு தேவை, கொடி பிடிக்கும் தொண்டர்களே தவிர, தடி எடுக்கும் குண்டர்கள் அல்ல எனக்கூறியுள்ள அவர், ஒன்றுமையுடன் இருந்தால் மட்டுமே எதிரிகளை வெல்ல முடியும் என்பதன் அவசியத்தை உணர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைப்படிக்க...அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: போட்டியின்றி தேர்வாக இருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்