ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்வீடன், அயர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டுக்கு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வர வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் செல்ல ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் தடை விதித்துள்ளன.
இதையும் படிக்க: இந்தியாவில் 100ஐ தாண்டியது ஒமைக்ரான் தொற்று
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்