Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை: இந்திய கேப்டன் உள்பட 4 பேருக்கு கரோனா ; இருவர் தனிமை


புதுடெல்லி : மே.இ.தீவுகளில் நடந்து வரும் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் உள்பட 4 வீரர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மே.இ.தீவுகளில் 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டி நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து அணியையும் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்