Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மீண்டும் உயர்ந்த கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 2.86 லட்சம் பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் சற்று தணிந்திருந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் கடந்த 2 வருடங்களாக உருமாற்றம் அடைந்து, தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி, 3-வது அலை, 4-வது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதன் கோர முகத்தை பல்வேறு வடிவங்களில் காட்டி வருகிறது.

இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்துவந்தநிலையில், நேற்று முதல் மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 8 மணி நிலரப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 2,86,384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன்தினம் 2,55,874 பேருக்கும், நேற்று 2,85,914 பேருக்கும் கொரோனா உறுதியான நிலையில் இன்று, 2,86,384 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.

image

இந்தியாவில் ஒரே நாளில் 3,06,357 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,76,77,328 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,02,472 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 573 பேர் இறந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 4,91,700 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 163.84 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்