Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தரமற்ற உணவு - விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை

சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை காரணமாக விக்கிரவாண்டி அருகே உள்ள அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா,அரிஸ்டோ ஆகிய 5 உணவகங்களில் அரசுப்பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

image

ஏற்கெனவே மாமண்டூர் அருகே உள்ள உணவகத்தில் பேருந்துகள் நின்று செல்ல தடை விதித்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி உணவகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்